நாங்கள் ஒரு ஆண்டுக்கு முன்பே பிரிந்துவிட்டோம்..!- அமலா பால், விஜய் மனு
சென்னை: ஒரு ஆண்டுக்கு முன்பே நாங்கள் பிரிந்துவிட்டோம். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தனியாகத்தான் வாழ்கிறோம் என நடிகை அமலா பால் தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அமலா பால் - இயக்குநர் விஜய் இருவரும் இன்று தங்கள் விவாகரத்து மனுவை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதற்காக இருவரும் தனித்தனியாக காரில் நீதிமன்றத்துக்கு வந்தனர்.

குடும்ப நல நீதிமன்றத்தின் நீதிபதி மரியா டில்டாவிடம் முதலில் அமலா பால் விவாகரத்து மனு கொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து இயக்குநர் விஜய் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், "எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் 10-ந்தேதி திருமணம் நடந்தது. ஒரு ஆண்டுக்குள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015 மார்ச் 3-ந்தேதி முதல் பிரிந்து தனித் தனியாகத்தான் வாழ்கிறோம்.
எங்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடில் சுமூக தீர்வு ஏற்படவில்லை. சேர்ந்து வாழ வழியில்லை. எனவே பரஸ்பரம் விவாகரத்து கேட்கிறோம். நாங்கள் ஜீவனாம்சமோ சொத்துக்களோ கேட்கவில்லை," என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு 6 மாதத்துக்கு தள்ளி வைத்தார்.
-
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி -
விஜய் முதலமைச்சர் ஆக வேண்டி.. பால்குடம் எடுத்த தவெக பெண்கள்.. திரும்பிப் பார்த்த ஈரோடு! -
வருணுடன் திருமணத்தை நிறுத்தியது இதனால்தான்! அப்பவே வெளிப்படையாக பேசிய திரிஷா.. காரணம் இதுதானாமே! -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
தவெகவை விடுங்க.. இனி அவரை காப்பாத்துறதே திக்திக்தான்.. விஜய் கேம்பில்.. வெடிக்கும் அடுத்த பூகம்பம் -
பனையூரில் 60 நிர்வாகிகளுக்கு டேட்டாவுடன் கவர் கொடுத்த தவெக.. திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்? -
நேரில் வாங்க! கரூர் கேசில் விஜய்க்கு சிபிஐ சம்மன்! நாளை மீண்டும் விசாரணை! காட்டிக்கொடுத்த போன் கால் -
நடிகர் விஜய், த்ரிஷா தனிப்பட்ட வாழ்க்கை.. விமல், பார்த்திபன் கருத்தை கவனித்தீர்களா -
விஜய் என் நண்பர்.. திரிஷாவை பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! மிரட்டல் போன்! உடைத்து பேசிய பார்த்திபன் -
ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம்












Click it and Unblock the Notifications