அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப் போட வந்த அம்பிகா, ராதா.. போலீஸுடன் கடும் வாதம்
சென்னை: நடிகைகள் அம்பிகாவும், ராதாவும் உரிய அடையாள அட்டை இல்லாமல் ஓட்டுப் போட வந்ததால் அவர்களை உள்ளே விட போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் கடும் வாதம் புரிந்து பின்னர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இன்று நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் பிரபல நடிகர்கள், நாடக நடிகர்கள் என திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது தேர்தல் நடந்த இடம்.

சகோதரிகளான நடிகைகள் அம்பிகா, ராதாவும் ஓட்டுப் போட வந்திருந்தனர. ஆனால் அவர்கள் உரிய அடையாள அட்டையை எடுத்து வரவில்லை. இதனால் உள்ளே நுழைய அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதனால் போலீஸாருடன் இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாங்கள் பிரபல நடிகைகள், எங்களுக்கு அடையாள அட்டை தேவையில்லை என்று இருவரும் வாதிட்டனர். சிறிய வாதத்திற்குப் பின்னர் இருவரையும் போலீஸார் அனுமதித்தனர். இதையடுத்து இருவரும் உள்ளே சென்று வாக்களித்து விட்டுத் திரும்பினர்.












Click it and Unblock the Notifications