நபிகள் நாயகம் கூறியதை நான் கூறினால் இஸ்லாத்தை இழிவுபுடுத்துவதா?: பாத்திமா பாபு
சென்னை: ஜெயலலிதா அம்மாவின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று கூறி தான் இஸ்லாத்தை இழிவுபடுத்தவில்லை என்று அதிமுக நட்சத்திர பேச்சாளரான நடிகையும், செய்தி வாசிப்பாளருமான பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெரிய அக்ரஹாரம் வண்டிப்பேட்டையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரான நடிகை பாத்திமா பாபு கடந்த 19ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என நபிகள் நாயகம் தெரிவித்துள்ளார். அப்படி பார்த்தால் ஜெயலலிதா அம்மாவின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்றார்.
நபிகள் நாயகம் கூறியதை ஜெயலலிதாவுக்கு ஏற்றது போன்று பேசிய பாத்திமா பாபு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில்,

நபிகள் நாயகம்
நபிகள் நாயகத்தின் பெயரை நான் கூறக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர் அனைவருக்கும் சொந்தமானவர். இறை தூதர் என்று தான் சேர்த்து கூற வேண்டும்.

அம்மா
அம்மாவை நபிகள் நாயகம் என்று கூறினால் தான் அது தவறான ஒப்பீடு ஆகும். நான் ஒன்றும் அப்படி சொல்லவில்லையே. இஸ்லாத்தை தீவிரமாக பின்பற்றிய தந்தையால் வளர்க்கப்பட்டவள் நான்.

மதங்கள்
அனைத்து மதங்களையும் மதிப்பவள் நான். இந்து மதத்தில் இருந்து மாறியதால் நான் இப்படி பேசுவதாக கூறுவது சரி அல்ல. இஸ்லாத்தில் ஹராம் ஆக்கப்பட்ட எந்த விஷயத்தையும் செய்ய மாட்டேன்.

மதச்சாயம்
நபிகள் நாயகம் கூறியதை தான் நானும் தெரிவித்தேன். நான் எதிர்க்கட்சியில் இருப்பதால் எனது பேச்சிற்கு மதச்சாயம் பூசுகிறார்கள். நான் எந்த மதத்தையும் இழிவுபடுத்துபவள் இல்லை என்று எனக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும். அப்படி இருக்கும் நான் மிகவும் நேசிக்கும் என் மதத்தை இழிவுபடுத்துவேனா?












Click it and Unblock the Notifications