அம்மா குடிநீர் பாட்டிலில் இரட்டை இலையா...??
சென்னை: தமிழக அரசின் அம்மா குடிநீர் திட்டம் முதல் சர்ச்சையைச் சந்தித்துள்ளது. அம்மா குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பாட்டிலில் இரட்டை இலை சின்னத்தை சன்னமான முறையில் வரைந்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
எனவே இது லோக்சபா தேர்தலை மனதில் கொண்டும், மக்களை அதிமுகவுக்கு ஆதரவாக திருப்பவும் நடக்கும் முயற்சி என்றும் விவாதம் வெடித்துள்ளது.

செப்டம்பர் 15 முதல்
அம்மா குடிநீர் என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி வைத்தார்.

பத்து ரூபாய்க்கு மினரல் வாட்டர்
பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும் பாதுகாப்பான குடிநீரை குறைந்த விலையில் வழங்கும் திட்டம் இது. ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில் ரூ. 10க்கு இதன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

படு சூடான விற்பனை
அம்மா குடிநீர் என்ற பெயரிலான இந்த தண்ணீர் பாட்டில் விற்பனைக்கு வந்ததுமே படு வேகமாக விற்றுத் தீர்ந்தது. தமிழகம் முழுவதும் பஸ் நிலையங்கள், தொலைதூர பஸ்களில் இது விற்கப்படுகிறது.

இரட்டை இலை...
இந்தநிலையில் பாட்டிலில் உற்றுப் பார்த்தால் மட்டுமே தெளிவாகத் தெரியும் வகையில் இரட்டை இலைச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.

இலையா.. இல்லையா..
ஆனால் இதை இரட்டை இலை இல்லை என்று அரசு சார்பில் விரைவில் மறுப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பறக்கும் குதிரைன்னு சொன்னவங்களாச்சே...
ஏற்கனவே மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவுச் சின்னத்தின் முகப்பில் இரட்டை இலை வடிவிலான புதிய சிலை உருவாக்கப்பட்டது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டபோது அது இரட்டை இலை இல்லை, பறக்கும் குதிரை என்று அரசு சார்பில் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
எனவே இந்த சர்ச்சைக்கும் உரிய விளக்கம் வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications