இலங்கை மனித உரிமைகள் பற்றி சர்வதேச விசாரணை: ஆம்னஸ்டி வலியுறுத்தல்
சென்னை: இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் இந்திய பொறுப்பாளர் அனந்த் பத்மநாபன் கூறுகையில்,
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். போரின்போது இரு தரப்பினரும் செய்த மனித உரிமை மீறல் பற்றிய தகவல்கள் எங்களுக்கு நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறது என்றார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் மசோதாவை வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக இது குறித்து நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். அதனை மற்ற நாடுகள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நவநீதம் பிள்ளை பாரபட்சத்துடன் செயல்படுவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications