ஜெ. மகள் விவகாரம்.. ரத்த மாதிரி இல்லை என்கிறது அப்பல்லோ.. அம்ருதா வேண்டுகோளுக்கு விடை என்ன?
அம்ருதா புகார் முக்கியத்துவம் பெற்றது. தைரியமாக அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தன்னைத்தான், ஜெ. மகள் என அறிவிக்க வேண்டும் என கோரியதோடு, மரபணு சோதனைக்கும் தயார் என கூறினார்.
Recommended Video

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இல்லை என அப்பல்லோ மருத்துவமனை கூறியிருப்பதன் மூலம், அம்ருதா என்ற பெண் அவரது மகள் என கூறி தொடர்ந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அம்ருதாவின் கோரிக்கைக்கு இன்னும் விடை கிடைக்காத சூழல் இதன் மூலம் உருவாகியுள்ளது.
ஜெயலலிதா மறைந்த நிலையில், பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண், அவர்தான் ஜெயலலிதாவின் மகள் என தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உறவுக்கார பெண்மணி
ஜெயலலிதாவின் உறவினர் லலிதா, இந்த பரபரப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பேட்டியளித்தார். பெங்களூரை சேர்ந்த லலிதா அளித்த பேட்டியில், நடிகர் சோபன் பாபு மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இணைந்து குடும்பம் நடத்தியதாகவும், அதன் காரணமாக ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், தனது பெரியம்மாதான், ஜெயலலிதாவுக்கு பேறுகாலம் பார்த்ததாகவும், லலிதா கூறினார்.

அம்ருதா
லலிதாவின் பேட்டியை வைத்து பார்த்தால், அம்ருதாதான் அந்த பெண் குழந்தையா என்ற கேள்வி பல மட்டங்களில் எழுந்தது. லலிதாவிடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டபோது, அம்ருதாதான் அந்த பெண் குழந்தையா என தெரியாது என்றபோதிலும், ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது நிஜம் என்று கூறினார்.

தைரியமான வழக்கு
இந்த பின்னணி அடிப்படையில்தான் அம்ருதா புகார் முக்கியத்துவம் பெற்றது. தைரியமாக அம்ருதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தன்னைத்தான், ஜெ. மகள் என அறிவிக்க வேண்டும் என கோரியதோடு, மரபணு சோதனைக்கும் தயார் என கூறினார். இந்திய அளவில் மிகவும் பிரபலமான ஒருவரை, ஒரு கோடி தொண்டர்களை உறுப்பினர்களாக கொண்ட கட்சியின் நம்பிக்கைக்குரிய ஒருவர் பற்றி இவ்வாறு ஒரு வழக்கு தொடர அம்ருதா எளிதில் முடிவெடுத்திருக்க முடியாது.

அம்ருதாவிற்கு பதில் என்ன?
இந்த சூழ்நிலையில்தான், மரபணு சோதனை பற்றிய அம்ருதா கோரிக்கை என்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. ஆனால், அப்பல்லோ மருத்துவமனை, ஜெ. ரத்த மாதிரி இல்லை என கை விரித்துள்ளது. மிகவும் பிரபலமான ஜெ. ரத்த மாதிரி இல்லை என அப்பல்லோ ஏன் கூறியது என்பது புரியாத புதிராக உள்ளது. இந்த விஷயத்தில் அம்ருதாவின் வேண்டுகோள் என்பது விடை காணப்படாத புதிராகிவிட்டது. இனி ஹைகோர்ட் என்ன மாதிரி உத்தரவுகளை பிறப்பிக்கப்போகிறது என்பதை மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துள்ளனர்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications