ஓபிஎஸ் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் தற்கொலை முயற்சி.. திடீர் பரபரப்பு!
சென்னையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் ரெஜூஸ் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார்.
குமரி: சென்னையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் ரெஜூஸ் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த ரெஜூஸ் என்பவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீட்டு முன்பு சென்ற ரெஜூஸ் நிறைய மாத்திரைகளை சாப்பிட்டு இருக்கிறார்.

அதன்பின் கையில் வைத்து இருந்த விஷ பாட்டிலை குடிக்க முடிவெடுத்து குடிக்க சென்று இருக்கிறார். அப்போது அங்கு இருந்த, அதிமுகவினர், அவரை தடுத்து பாட்டிலை தூக்கி எறிந்தனர், அதன்பின் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்து உடனே அவரை மாத்திரைகளை வாந்தி எடுக்க வைத்தனர்.
இந்த நிலையில் அவர் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். அவருக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று அவரே பேட்டியளித்துள்ளார்.
அதில், அதிமுகவில் தளவாய் சுந்தரம் தலையீடு அதிகமாக உள்ளது. குமரி மக்களுக்கு அவர் எந்த நல்லதும் செய்ய விடுவதில்லை. நான் அதிமுக ஒன்றிய செயலாளராக இருக்கிறேன். நான் மக்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டு கட்சி மூலம் அதை மக்களுக்கு கொண்டு வந்தால், அதை தலைவாய்சுந்தரம் தடுக்கிறார்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை வாங்கி தர ஏற்பாடு செய்தேன். இதற்காக முதல்வரிடம் பேசினேன். ஆனால் அதற்கும் தளவாய் சுந்தரம் முட்டுக்கட்டை போட்டார். இதனால் எனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டது.
இதுகுறித்து முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் பல முறை புகார் அளித்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தற்போது, நேரடியாக தற்கொலை செய்ய களமிறங்கிவிட்டேன் என்றுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications