சிதம்பரம் அருகே இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்

சிதம்பரம் அருகே இரண்டரை வயது பெண் குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பழனிச்சாமி (45)என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிதம்பரம் அருகே இரண்டரை வயது பெண் குழந்தையை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த தீர்த்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் தனது நண்பர் பழனிச்சாமி என்பவருடன் வீட்டில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் ராமமூர்த்தி அப்படியே படுத்து விட்டார்.

 An elderly man was for molesting a 2 year old girl in Chidambaram.

இந்த நிலையில் நள்ளிரவு ராமமூர்த்தியின் மனைவி விழித்து பார்த்தபோது அருகில் தூங்கிக்கொண்டிருந்த இரண்டரை வயது பெண் குழந்தை காணாமால் போனதை கண்டு திடுக்கிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை தேடிய போது அருகில் உள்ள புதர் பகுதியில் பலத்த காயங்களுடன் குழந்தை மீட்டனர்.

இதையடுத்து குழந்தையை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கிள்ளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், தந்தை ராமமூர்த்தியுடன் மது அருந்திய கூட்டாளி பழனிச்சாமி, அந்த பெண் குழந்தையை கடத்திச்சென்று பலாத்காரம் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பழனிச்சாமியை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+