'தமிழ் பிக்பாஸ்' வீடு அருகே பிளம்பர் மர்ம மரணம்! போலீஸ் தீவிர விசாரணை
சென்னை: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிளம்பராக பணியாற்றிய ஊழியர் திடீரென மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சென்னை புறநகர் பகுதியிலுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டிக்குள் 'செட்' அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பிளம்பராக பணியாற்றிய கரீம் இப்ராஹிம் ஷேக் என்பவர் இன்று திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த தொழிலாளி மும்பையை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விஜய் டிவி தரப்பு கூறுகையில், பிக்பாஸ் வீடு அமைந்துள்ள இடம் அருகே வேறு சூட்டிங் நடப்பதாகவும் அங்கு சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் தங்கள் இடத்தில் நடக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்தது நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று இரவு நடந்ததாக போலீசார் கூறுகிறார்கள். குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டபோது தவறி விழுந்தது இறந்ததாகவும், விழுந்தபோது ஏற்பட்ட வலிப்பு பிரச்சினையால் அவர் இறந்ததாகவும் வெவ்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணைக்கு பிறகு உண்மை தெரியவரும். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.