கூவத்தூர் ரிசார்ட்டில் ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள் - துண்டுச் சீட்டால் பரபரப்பு
கூவத்தூர் ரிசார்ட்டில் ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துவதாக கூறி வந்துள்ள துண்டுச் சீட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்டின் லெட்டர் பேட் அல்லது துண்டுச் சீட்டில் எங்களை ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். காப்பாற்றுங்கள் என்று கூறி வந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதை எழுதியது யார் என்பது தெரியவில்லை. எம்.எல்.ஏக்கள்தான் தற்போது அங்கு வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதால் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது உண்மையா என்றும் தெரியவில்லை. அதேசமயம், கோல்டன் பே ரிசார்ட் பேப்பரில் எழுதி வந்துள்ளதால் இதைப் புறக்கணிக்கவும் முடியவில்லை.
பிப்ரவரி 14ம் தேதி எழுதப்பட்டுள்ள அந்த துண்டுச் சீட்டில் உள்ள தகவல் இதுதான்:
கூவத்தூர் ரிசார்ட்டில் ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள் - துண்டுச் சீட்டால் பரபரப்பு #kuvathurresorthttps://t.co/aRNyiMufzS pic.twitter.com/Aoenhv9Ibs
— Oneindia Tamil (@thatsTamil) February 15, 2017
மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் ஐயா அவர்களே, நாங்கள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் இங்கு கூவத்தூரில் ரவுடிகளால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறோம். டிவி செல், பேப்பர் என எதுவுமே கிடையாது. ரவுடிகள் அடிக்கடி அடித்துத் துன்புறுத்துகின்றனர்.
நேற்று ஒரு எம்.எல்.ஏ. நண்பரை அடித்ததில் வயிற்று வலி, நெஞ்சு வலி ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார். எனவே ரவுடிகளிடமிருந்து எங்களை ஆளுநர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.