காரைக்குடியில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்து மீறில்... இளைஞர் கைது - வீடியோ
காரைக்குடி ஆயிரம் விளக்கு பகுதியில் தனியாக இருந்த பென்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படத்தனர்.
காரைக்குடி: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் முகமது. இவர் திருமணத்துக்கு நாட்டியக் குதிரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று முகமது காரைக்குடி, ஆயிரம் விளக்குப் பகுதியில் தன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, வீட்டில் ஒரு பெண் தனியாக சமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் முகமது அந்த பெண் வீட்டுக்குள் நுழைந்தார். மேலும், அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த போது அப்பெண் சத்தம் போட்டுக் கத்தினார்.
அந்தச் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து முகமதுவைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதோடு நில்லாமல் போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு வந்த போலீசார் முகமதுவை கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications