பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா?
சென்னை: பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா என்பது குறித்து சட்டசபையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது.
சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பா.ம.க. உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்; மதுவிலக்கை நீங்கள் கொண்டுவரவில்லை என்றால், சட்டசபை தேர்தலில் பா.ம.க. வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் மதுவிலக்கை அமல்படுத்தும் என்றார்.

அப்போது சபையில் சிரிப்பலை எழுந்தது. மீண்டும் பேசிய உறுப்பினர் கணேஷ்குமார், பா.ம.க. ஏன் ஆட்சிக்கு வர முடியாது. 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க.வும் ஒரு இடத்தில் தான் வென்றது. பா.ம.க.வும் ஒரு இடத்தில் ஜெயித்தது. 1996-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. 4 இடங்களில் தான் வென்றது. பா.ம.க.வும் 4 இடங்களில் ஜெயித்து வரலாறு படைத்தது என்றார்.
அப்போது எழுந்து பேசிய அமைச்சர் பழனியப்பன், முதலில் உங்கள் கட்சி தலைவர் அன்புமணி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவாரா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு கணேஷ்குமார், ஏற்கனவே தர்மபுரி லோக்சபா தொகுதியில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications