புளித்த ஏப்பம் விடுபவனுக்கு பசி ஏப்பத்தின் நிலை புரியாது - உர்ஜித் படேலுக்கு அன்புமணி, வாசன் கண்டனம்
விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வது பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய ஆர்பிஐ ஆளுநர் உர்ஜித் படேலுக்கு அன்புமணி, ஜி.கே. வாசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்
சென்னை: உர்ஜித்தின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தராமல், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டால் பணவீக்கம் ஏற்படும் என்று உர்ஜித் படேல் கூறியுள்ளதற்கு அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் கூறியிருக்கிறார். அவரின் இந்த கருத்து மிகவும் குரூரமானது.
புளித்த ஏப்பம் விடுபவனுக்கு பசி ஏப்பக்காரனின் நிலை புரியாது என்பார்கள். உர்ஜித் பட்டேலின் நிலையும் அதேபோல் தான். உர்ஜித் பட்டேலின் ஊதியம் கடந்த வாரம் தான் ரூ.90 ஆயிரத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இந்த அளவு ஊதிய உயர்வு பெறும் உர்ஜித் பட்டேல்களால் ஆண்டுக்கு 3 சதவீதம் கொள்முதல் விலை உயர்வு பெறும் விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள முடியாது. எனவே, உர்ஜித்தின் கருத்துகளுக்கு முக்கியத்துவம்தராமல், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
அடுத்தகட்டமாக, வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலை குறித்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்; நிலுவையில் உள்ள பாசனத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகள் ஒருபோதும் கடன் தள்ளுபடி கோர மாட்டார்கள் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
இதே போல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர்க்க வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார்கள். இதனை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். நாடு முழுவதும் விவசாயத் தொழில் தான் பிரதான தொழிலாக உள்ளது.
நாட்டில் விவசாயத் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும். முதலாளிகளுக்கு கடனில் சலுகை, தள்ளுபடி செய்வதை தவிர்த்து வசூல் செய்ய வேண்டும். இதனை விட்டுவிட்டு விவசாயக் கடனை வசூல் செய்வதில் முனைப்போடு செயல்பட கூடாது. எனவே மத்திய அரசு விவசாயத் தொழிலைக் காப்பாற்றவும், விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவும், விவசாயத்தை நம்பியிருக்கின்ற தொழிலாளர்கள் நலன் காக்கவும் முன்வர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications