லோக்சபாவில் அன்புமணி.. ராஜ்யசபாவில் திருச்சி சிவா.. குறைந்த நாட்கள் சபைக்கு வந்தவர்கள்!
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் யார் யார் எத்தனை நாட்களுக்கு சபைக்கு வந்தார்கள் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
தமிழக எம்.பிக்களைப் பொறுத்தவரை பாமகவின் டாக்டர் அன்புமணி ராமதாஸ், லோக்சபா கூட்டத் தொடரில் குறைந்த நாட்கள் சபையில் கொண்டவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.
ராஜ்யசபாவைப் பொறுத்தவரை திமுக உறுப்பினர் திருச்சி சிவா இதில் முதலிடத்தில் இருக்கிறார்.

பட்ஜெட் கூட்டத் தொடர்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூலை 7 முதல் ஆகஸ்ட் 14 வரை நடந்தது. மொத்தம் 27 நாட்கள் அலுவல்கள் நடந்தன.

அன்புமணி 15
இதில் தமிழக எம்.பிக்களில் லோக்சபாவில் அன்புமணிதான் குறைந்த அளவிலான நாட்களில் சபைக்கு வந்துள்ளார். அவர் 15 நாட்களுக்கு வந்துள்ளார்.

திருச்சி சிவா 11
ராஜ்யசபாவில் திமுகவின் திருச்சி சிவா குறைந்த அளவாக 11 நாட்கள் சபைக்கு வந்துள்ளார்.

ரபி பெர்னார்ட் 15 -தங்கவேலு 18
ராஜ்யசபாவில் திமுக உறுப்பினர் தங்கவேலு 18 நாட்களும், அதிமுகவின் ரபி பெர்னார்ட் 15 நாட்களும் வந்துள்ளனர்.

சோனியா 21
அகில இந்தியத் தலைவர்களில் சோனியா காந்தி 21 நாட்கள் வந்துள்ளார்.

ராகுல் காந்தி 22
ராகுல் காந்தியின் பிரசன்ட் கணக்கு 22 ஆகும்.

தேவெ கெளடா 23
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள தலைவருமான தேவெ கெளடா 23 நாட்கள் வந்துள்ளார். ஆனால் இவர் பேசியது மிக மிக குறைவு.

வருண் காந்தி 20
மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி 20 நாட்கள் வந்து போயுள்ளார்.

மன்மோகன் சிங் புல் பிரசன்ட் !
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 27 நாட்களும் வந்துள்ளார். பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி 26 நாட்கள் வந்துள்ளார்.












Click it and Unblock the Notifications