அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை சம்பளம்: அன்புமணி வாக்குறுதி
சென்னை: பாமக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம் அளிக்கப்படும் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் பாமக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில்,
பாமக வித்தியாசமான கட்சியாக இருக்கும் என்று மக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத்திற்கும் கல்வி, மின்சாரம் ஆகியவற்றை இலவசமாக அளித்து ஆண்டுக்கு ரூ.1 லட்சத்தை இலவசமாக்குவோம்.

தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை பாமக அளிக்கும். பேருந்து, மின்சார கட்டணம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உயர்த்தப்படமாட்டாது. மாறாக அந்த கட்டணங்கள் குறைக்கப்படும். தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சம்பளம் அளிக்கப்படும். ஒரு பைசா ஊழல், ஒரு சொட்டு மது இல்லா அரசை அமைத்துக் காட்டுவோம்.
தமிழகத்தை குடிசை இல்லா மாநிலம் ஆக்குவோம். குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியம் அளிப்போம். மேலும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம் என்றார்.












Click it and Unblock the Notifications