அமீத் ஷாவுடன் பேசியது என்ன?... அன்புமணி விளக்கம்
சென்னை: பாஜக தலைவர் அமீத் ஷாவை சென்னை திருமண விழாவின்போது சந்தித்துப் பேசியது மரியாதை நிமித்தமானது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத் திருமணம் இன்று சென்னையில் நடந்தது. இதற்காக நேற்றே மூத்த தலைவர்களான அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்னை வந்து சென்று விட்டனர்.

இன்று பாஜக தலைவர் அமீத் ஷா வந்து கலந்து கொண்டார். இந்த திருமணத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் பாஜக தலைவர் அமீத் ஷா பேசியதாக கூறப்பட்டது. இருப்பினும் விஜயகாந்த், அமீத் ஷாவை சந்திக்கவில்லை என்று பின்னர் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் அமீ்த் ஷாவுடன் தான் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார் அன்புமணி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மரியாதை நிமித்தமாகவே பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினேன். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாமக தலைமைதான் முடிவெடுத்து அறிவிக்கும் என்றார் அன்புமணி.












Click it and Unblock the Notifications