2016ல் தமிழ்நாட்டில் பாமக ஆட்சிதான்: சொல்கிறார் அன்புமணி
தர்மபுரி: 2016ல் அ.தி.மு.க.வை வீழ்த்தி, ஆட்சியை பிடிப்போம் என பாமகவின் இளைஞரணித்தலைவரும் தர்மபுரி எம்.பியுமான அன்புமணிராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பா.ம.க. சார்பில் தர்மபுரி வன்னியர் மண்டபத்தில் வாக்காளர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது,
''தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது என்பது வருத்தாக இருந்தாலும், பெரிய பண அலையை எதிர்த்து தர்மபுரியில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இது என்னுடைய வெற்றி அல்ல. உங்களுடைய வெற்றி. என்னை தேர்ந்தெடுத்ததற்கு மனமார்ந்த நன்றிகள். அதேபோல் பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், கூட்டணி கட்சி தலைவர்கள் விஜயகாந்த், வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டு தொகுதிகளில் மட்டும் நாம் வெற்றி பெற்றாலும், தி.மு.க பூஜ்ஜியம் ஆகியிருக்கிறது. தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்றுதான் இந்த கூட்டணி அமைத்தோம், முதல் வெற்றியை தர்மபுரியில் பெற்றுவிட்டோம் இது 2016 தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். அப்போது அ.தி.மு.கவையும் வீழ்த்துவோம். அடுத்த ஆட்சி நம்முடையதுதான்'' என்றார் அன்புமணி ராமதாஸ்.












Click it and Unblock the Notifications