தமிழகத்தில் அன்புமணி அலை வீசுகிறது, ஆனால் இந்த ஊடகங்கள் தான்...: ராமதாஸ்
கோவை: தமிழகத்தில் அன்புமணி அலை வீசுவதாகவும் அதை ஊடகங்கள் வேண்டும் என்றே இருட்டடிப்பு செய்வதாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். கவுண்டம்பாளையத்தில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள 25 சதவீத புதிய வாக்காளர்கள், மதுவிலக்கை ஆதரிக்கும் 30 சதவீத பெண்கள், 20 சதவீத நடுநிலை வாக்காளர்கள் என 75 சதவீதம் பேர் அன்புமணி ராமதாஸை முதல்வராக்குவது என்று முடிவு செய்துள்ளனர்.
அதிமுகவும், திமுகவும் மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளபோதிலும் மக்களுக்கு பாமக மீது தான் நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் தற்போது அன்புமணியின் பக்கம் தான் அலை வீசுகிறது. ஆனால் அவரை தோற்கடிக்க பலர் முயற்சித்து வருகிறார்கள்.
ஊடகங்களும் கருத்து திணிப்பை செய்கின்றன என்றார்.