ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை: சிபிஐ விசாரணை கேட்ட சீமான் மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி
சென்னை: ஆந்திர துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆந்திராவின் சித்தூர் மாவட்ட வனப்பகுதியில், செம்மரம் வெட்டி கடத்த முற்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த 20 கூலித் தொழிலார்களை ஆந்திர போலீசார் ஈவு, இரக்கமின்றி சுட்டு பொசுக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஆந்திர போலீஸ், போலி என்கவுண்டர் நடத்தியுள்ளதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்நிலையில், வழக்கை சிபிஐ விசாரித்தால்தான் நியாயம் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சிபிஐ விசாரணை மட்டுமின்றி, இறந்தவர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க அரசை உத்தரவிடவும் அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த, நீதிபதிகள், மாலா, சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தள்ளுபடி செய்தது.
உச்சநீதிமன்றம் மற்றும் ஆந்திர ஹைகோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், சென்னை ஹைகோர்ட்டிலும் தனியாக விசாரணை தேவையில்லை என்று கூறி, சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேநேரம்., ஆந்திர ஹைகோர்ட்டில் நடக்கும் வழக்கில், சீமான் தன்னையும் மனுதாரராக இணைத்துக்கொள்ள மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்று ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications