அசிங்கப்பட்டார் ஆட்டோ பாசேஞ்சர்.. ஏற்காடு ஆட்டோ டிரைவர்கள் பற்றி அமெரிக்க போலீசுக்கு புகார்!
Recommended Video

சேலம்: ஏற்காட்டில் ஆட்டோ டிரைவர்கள் அதிகம் பணம் கேட்பதாக அமெரிக்க போலீசாரிடம் மலையாளி ஒருவர் புகார் அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கொச்சியை சேர்ந்த அருணானந்த் என்பவர் சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்கு ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர், டிவிட்ரில் அதை புகாராக பதிவு செய்தார். "1.5 கி.மீ தூரத்திற்கு ஆட்டோக்காரர்கள் 50 ரூபாய் கட்டணம் கேட்கிறார்கள். இதை சரி செய்ய ஏதேனும் சிஸ்டம் உள்ளதா" என அவர் அதில் தெரிவித்தார்.
|
புகார் பதிவு
அத்தோடு விடவில்லை. சேலம் போலீஸ் டிபார்ட்மென்ட் என்ற ஐடியை டேக் செய்தார். அது வெரிஃபைடு செய்யப்பட்ட ஐடி என்பதால் அது காவல்துறை ஐடி என நினைத்து புகாரை தெரிவிக்க அவர் இவ்வாறு செய்தார். மேலும் தமிழக முதல்வர் மற்றும் இரு நாளிதழ்கள் டிவிட்டர் ஐடிகளையும் அவர் டேக் செய்துள்ளார்.

அமெரிக்க காவல்துறை
ஆனால் இதில்தான் ஒரு தப்பு செய்துவிட்டார் அருணானந்த். அவர் டேக் செய்த சேலம் போலீஸ் டிபார்ட்மென்ட் என்ற ஐடி, தமிழகத்திலுள்ள சேலம் போலீசாருடையது கிடையாது. அமெரிக்காவிலுள்ள காவல்துறை ஐடி அது.
|
நாங்கள் அவுங்க இல்லப்பா
டிவிட்டரிலேயே 'அமெரிக்க சேலம்' போலீசாரும் பதில் அளித்துள்ளனர். அந்த பதிலில், நாங்கள், அமெரிக்காவின் ஒரேகான் பகுதியிலுள்ள சேலம் போலீஸ் என கூறப்பட்டுள்ளது. இந்த டிவிட் மற்றும் அதற்கு அமெரிக்க போலீசார் கொடுத்த ரிப்ளே என்பது இணையத்தில் வைரலாகியுள்ளது.
— D Roopa IPS (@D_Roopa_IPS) November 23, 2017 |
ரூபாவுக்கும் சிரிப்பு
கர்நாடக காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றும் ரூபாவும், இந்த டிவிட்டை ஷேர் செய்துள்ளார். ஸ்மைலி எமோஜிகளை போட்டுள்ளார். இவர்தான் சசிகலா சிறையில் நடத்திய சாம்ராஜ்யத்தை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர்.












Click it and Unblock the Notifications