தென்காசியில் சாலை வசதி கோரி மாடு, கன்றுடன் வந்து நூதன முறையில் மனு அளித்த மக்கள்
சாலைவசதி கோரி பொதுமக்கள் மாடுகளுடன் வந்து மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி:சாலை வசதி செய்து தரக்கோரி தென்காசி நகராட்சி ஆணையாளரிடம் மாடுகளுடன் வந்து பொதுமக்கள் மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்காத காரணத்தினால் தமிழகத்தின் ஏராளமான மாவட்டங்களில் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் வசதி, சாலைவசதி, சுகாதார வசதிகள் போன்றவைகள் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே இதனை முன்னெடுத்து போராட்டங்கள், சாலைமறியல்களை போன்றவை நடத்தி தங்களது எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை கவனிக்க நகராட்சி, ஊராட்சி, மாநகராட்சி என எந்த துறையிலும் அதிகாரிகளோ, பிரதிநிதிகளோ இன்றி நாளுக்கு நாள் மக்கள் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர்,.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதி சொல்லமுடியாத அவலத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளித்து அதன் கோரமுகத்தை வெளிப்படுத்தி வருகிறது.

இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் இடறி விழுவதும், விபத்துக்களை சந்திக்க நேரிடுவதாக நடந்து வருகிறது இதுகுறித்து பலமுறை நகராட்சி ஆணையரிலிருந்து பல்வேறு அரசியல் கட்சியினர் வரை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
எனவே இந்த சாலைகளை சீரமைக்க கோரியும், இதுவரை நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பொதுமக்கள் மனு அளிக்க முடிவு செய்தனர்,
அதன்படி, பசுமாடு மற்றும் அதன் கன்றுக்குட்டியுடன் நகராட்சி அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டனர். பின்னர் தாங்கள் அழைத்து வந்த மாடுகளின் கழுத்தில் மனு ஒன்றினை எழுதி கழுத்தில் தொங்கவிட்டனர்.

அந்த மனுவில், 'மனிதர்கள் கொடுக்கும் மனு மீது நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகமே கால்நடைகளாகிய நாங்கள் கொடுக்கும் மனு மீதாவது நடவடிக்கை எடு' என்று எழுதப்பட்டிருந்தது.
பின்னர் மாடுகளுடன் ஆணையாளரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் மனு அளித்த பசுவின் கால் தடங்களையே கையெழுத்தாகப் பெற்று நகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள் கொடுத்தனர்.
பொதுமக்கள் மாடுகள், மற்றும் கன்றுக்குட்டிகளுடன் நகராட்சி அலுவலகம் வந்து போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications