தமிழக அரசின் நிதி உதவியை பெற அனிதா குடும்பம் மறுப்பு!
அனிதா தற்கொலையை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ.7 லட்சம் நிதியுதவியை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அரியலூர் : அரியலூர் அனிதா தற்கொலையை தொடர்ந்து அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்ட தமிழக அரசு அறிவித்த ரூ.7 லட்சம் நிதியுதவியை அவரது குடும்பத்தினர் வாங்க மறுப்பு தெரிவித்தனர்.
சிறு வயது முதல் மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு வலம் வந்த அரியலூர் அனிதா பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். எனினும் நீட் தேர்வில் சோபிக்க முடியாததால் உச்ச நீதிமன்றம் வரை சென்றார். நீதி கிடைக்காததால் அவர் தனது உயிரை கடந்த வெள்ளிக்கிழமை மாய்த்து கொண்டார்.

இந்நிலையில் அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். நேற்று அந்த மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரூ.7 லட்சத்துக்கான வரைவோலையை எடுத்து கொண்டு ஆட்சியர் லட்சுமி ப்ரியா குழுமூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு அனிதாவின் குடும்பத்தினரிடம் நிதியுதவியை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். ஆனால் அனிதாவின் உறவினர்கள் அந்த நிதியுதவியை வாங்க மறுத்துவிட்டனர்.
வரைவோலையை பெற்று கொள்ளுமாறு அனிதா உறவினர்களிடம் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் வாங்கவில்லை. நீட் விவகாரத்தில் சாதகமான முடிவை அரசு அறிவிக்க வேண்டுமென ஆட்சியரிடம் அனிதா சகோதரர் மணிரத்னம் கோரிக்கை வைத்தார்.
நல்ல முடிவை அரசு அறிவித்த பின்னர் இந்த நிதியுதவியை பெற்று கொள்வதாகவும், தனது தங்கைக்கு ஏற்பட்ட நிலை பிற மாணவர்களுக்கு ஏற்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications