அனிதா மரணத்துக்கு நீதி கோரி தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்- நூற்றுக்கணக்கானோர் கைது
தமிழகம் முழுக்க நீட்டுக்கு எதிராகவும், அனிதாவின் சாவுக்கு நியாயம் கேட்டும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை: தமிழகம் முழுக்க நீட்டுக்கு எதிராகவும், அனிதாவின் சாவுக்கு நியாயம் கேட்டும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.

சென்னையில்....
இந்நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியினர், அண்ணா சாலையில் புரட்சி கர மாணவர் இளைஞர் முன்னணியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பல்வேறு போராட்டங்கள்
சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் மாணவி அனிதாவின் இறப்புக்கு நியாயம் கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். கோவையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

விசிக கட்சியினர்
மதுரை, அரியலூர் உள்ளிட்ட இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாக கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலை
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் நீட் கவுன்சலிங் நடைபெறும் பல்நோக்கு மருத்துவமனை அருகே புரட்சிகர மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு
இதேபோல் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications