ராத்திரி 10 மணிக்கு சென்னைக்கு வந்த அன்னா ஹஸாரே...!
சென்னை: மும்பை செல்லும் வழியில் சென்னையில் தரையிறங்கிய அன்னா ஹஸாரே சில நிமிட ஓய்வுக்குப் பின்னர் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
திருவனந்தபுரம் சென்றிருந்த அன்னா ஹஸாரே நேற்று முன்தினம் ஹைதராபாத்துக்குப் புறப்பட்டா். வரும் வழியில் சென்னை வந்தார். இரவு பத்து மணியளவில் சென்னை வந்த அவரை, அவரது ஊழல் ஒழிப்பு இயக்க அமைப்பினர் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அன்னா ஓய்வெடுத்தார்.
அப்போது செய்தியாளர்கள் என்ன விஷயமாக சென்னை வந்துள்ளீர்கள் என்று கேட்டபோது, எனக்கு இப்போது உடல் சோர்வாக இருக்கிறது. எனவே பேச முடியாது என்று அன்னா கூறி விட்டார்.

அதன் பின்னர் நேற்று பிற்பகல் வாக்கில் அன்னா ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றார்.
கெஜ்ரிவால் உள்ளிட்டோருடன் இணைந்து தீவிரமாக ஒரு நேரத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடியவர் அன்னா. அவருக்குப் பின்னால் கிட்டத்தட்ட நாடே திரண்டு நின்றிருந்தது. ஆனால் அவர் சென்னை வந்தது யாருக்குமே தெரியாத அளவுக்கு மிகவும் அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications