அண்ணா பல்கலை. ஊழலுக்கு பின் இருக்கும் மாஸ்டர் மைண்ட் பேராசிரியர் உமா.. யார் இவர்?
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் முக்கிய காரணகர்த்தாவாக பேராசிரியர் ஜி.வி உமா இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் முக்கிய காரணகர்த்தாவாக பேராசிரியர் ஜி.வி உமா இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு தற்போது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 17 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அண்ணா பல்கலையில் விடைத்தாள் மறுத்திருத்தம், மறுகூட்டலில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருக்கிறது. தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.

பல கோடி ஊழல்
இதில் 200 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறைகேட்டை அண்ணா பல்கலையை சேர்ந்த ஜி வி உமா என்ற பேராசிரியைதான் நடத்தி இருக்கிறார். ஜி வி உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்து இருக்கிறது. இவருக்கு கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். தற்போது இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

என்ன வேலை
இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்துள்ளார். அப்போது தனக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி இவர் லஞ்சம் வாங்கியுள்ளார். ஒரு மாணவரிடம் 10 ஆயிரம் ரூபாய் என்று ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். மூன்று வருடம் நடந்த தேர்விலும் இந்த முறைகேடு நடந்துள்ளது.

என்ன துறையில் இருக்கிறார்
இவர் அண்ணா பல்கலையில் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பேராசிரியராக இருக்கிறார். அதே சமயத்தில் அண்ணா பல்கலை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்துள்ளார். தனக்கு கீழ் இருந்து திண்டிவனம் தேர்வு மைய அதிகாரிகளை, ஆசிரியர்களை இதில் பயன்படுத்தி இருக்கிறார். அதேபோல் இன்னும் சில ஆசிரியர்களையும் இவர் இந்த ஊழலில் பயன்படுத்தியுள்ளார்.

முக்கியமானவர்
சில ஆசிரியர்களை மிரட்டி இவர் பணிய வைத்ததாக கூறப்படுகிறது. இவர் 21 வருடமாக கல்லூரி ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். அதேபோல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு முன்னாள் அண்ணா பல்கலை துணை வேந்தர் ஒருவர் உதவியதாக கூறப்படுகிறது. அவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications