Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணா பல்கலை. ஊழலுக்கு பின் இருக்கும் மாஸ்டர் மைண்ட் பேராசிரியர் உமா.. யார் இவர்?

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் முக்கிய காரணகர்த்தாவாக பேராசிரியர் ஜி.வி உமா இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அண்ணா பல்கலை ஊழல்! 10 பேராசிரியர்கள் மேல் வழக்கு- வீடியோ

    சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் முக்கிய காரணகர்த்தாவாக பேராசிரியர் ஜி.வி உமா இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

    அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு தற்போது தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 17 மாணவர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    அண்ணா பல்கலையில் விடைத்தாள் மறுத்திருத்தம், மறுகூட்டலில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருக்கிறது. தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள்.

    பல கோடி ஊழல்

    பல கோடி ஊழல்

    இதில் 200 கோடி ரூபாய் வரை பணம் கைமாறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறைகேட்டை அண்ணா பல்கலையை சேர்ந்த ஜி வி உமா என்ற பேராசிரியைதான் நடத்தி இருக்கிறார். ஜி வி உமா தலைமையில்தான் இந்த முறைகேடு நடந்து இருக்கிறது. இவருக்கு கீழ் 9 பேராசிரியர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். தற்போது இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    என்ன வேலை

    என்ன வேலை

    இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்துள்ளார். அப்போது தனக்கு இருந்த அதிகாரத்தை பயன்படுத்தி இவர் லஞ்சம் வாங்கியுள்ளார். ஒரு மாணவரிடம் 10 ஆயிரம் ரூபாய் என்று ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் லஞ்சம் வாங்கியுள்ளார். மூன்று வருடம் நடந்த தேர்விலும் இந்த முறைகேடு நடந்துள்ளது.

    என்ன துறையில் இருக்கிறார்

    என்ன துறையில் இருக்கிறார்

    இவர் அண்ணா பல்கலையில் தகவல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் பேராசிரியராக இருக்கிறார். அதே சமயத்தில் அண்ணா பல்கலை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்துள்ளார். தனக்கு கீழ் இருந்து திண்டிவனம் தேர்வு மைய அதிகாரிகளை, ஆசிரியர்களை இதில் பயன்படுத்தி இருக்கிறார். அதேபோல் இன்னும் சில ஆசிரியர்களையும் இவர் இந்த ஊழலில் பயன்படுத்தியுள்ளார்.

    முக்கியமானவர்

    முக்கியமானவர்

    சில ஆசிரியர்களை மிரட்டி இவர் பணிய வைத்ததாக கூறப்படுகிறது. இவர் 21 வருடமாக கல்லூரி ஆசிரியர் பணியில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார். அதேபோல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு முன்னாள் அண்ணா பல்கலை துணை வேந்தர் ஒருவர் உதவியதாக கூறப்படுகிறது. அவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+