மிலாது நபி விடுமுறை காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம்
டிச. 2ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் டிச.5ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.
சென்னை: டிச. 2ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் டிச.5ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதால் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
தமிழக அரசு விடுமுறையின்படி மிலாது நபிக்கு டிசம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. ஆகவே அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அதற்கு ஏற்றமாதிரி உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் டிசம்பர் இரண்டாம் தேதி அண்ணா பல்கலைக்கழக தேர்வு ஒன்று நடைபெற இருந்தது.
இந்த நிலையில் மிலாது நபி பிறை நவம்பர் மாதம் 19ம் தேதி தோன்றியது. பிறையின் படி டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்பட வேண்டும். இதையடுத்து தமிழக அரசு விடுமுறையை மாற்றி டிசம்பர் 2ம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என அறிவித்தது.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. டிச. 2ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் டிச.5ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.