கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள்... அண்ணா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு
சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிந்து விழுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகள், அண்ணா பல்கலை பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 400-க்கும் மேற்பட்டோர் 60 தீயணைப்பு வாகனங்களுடன் அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

எனினும் கட்டடத்தில் மேலும் மேலும் தீப்பிடித்து வருவதால் தீயை அணைக்க வீரர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் கட்டடத்தின் 4 மாடிகளும், முகப்பு பகுதியும் இடிந்து விழுந்துள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநகராட்சி, சிஎம்டிஏ அதிகாரிகளும், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களு்ம ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications