தஞ்சையில் தொழிலதிபரை துடிக்க துடிக்க அரிவாள் வெட்டு.. மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
Recommended Video

தஞ்சை: தஞ்சையில் தொழிலதிபரை துடிக்க துடிக்க அரிவாளால் வெட்டி விட்டு தப்பிய 4 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள அபி & அபி மோட்டார் ஷோரூம் முதலாளி இளங்கோவன் (62). இன்று அதிகாலை ஷோரூமில் போர்வெல் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்வையிட தனது நிறுவனத்திற்கு வந்திருந்தார்.

பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை முதலில் கட்டையால் தாக்கி பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டியதால் கீழே மயக்கமடைந்து விழுந்தார்.
பின்னர் ஷோ ரூமில் வேலை பார்க்கும் பணியாளர்களும் மற்றும் அக்கம்பக்கத்தினரும் கூச்சலிட்டதால் 4 பேர் கொண்ட கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பியது. பின்னர் மருத்துவக் கல்லூரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமா இல்லை குடும்ப பிரச்சனையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்த இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications