காங்கிரஸ், வாசன் காங்கிரஸுக்கு நடுவே தனி ஆவர்த்தனம் வாசிக்கும் குறளரசு ஜெயபாரதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவான குளரசு கே.ஜெயபாரதி என்பவர் புதுக் கட்சி தொடங்கியுள்ளார்.
இந்தக் கட்சிக்கு அவர் திராவிட மக்கள் காங்கிரஸ் என்று பெயரிட்டுள்ளார்.
சமீபத்தில்தான் காங்கிரஸிலிருந்து ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களோடு பிரிந்து வந்தார். இந்த நிலையில் குறளரசு ஜெயபாரதியும் பிரிந்து வந்திருக்கிறார். ஆனால் வாசன் தரப்போடு சேராமல் தனிக் கட்சி தொடங்குகிறார்.
கடந்த 1984-88 வரை திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுடன் கட்சி தொடங்கியுள்ளார். இவருக்கு தற்போது 68 வயதாகிறது. இவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலுவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் உள்ளேயும், வெளியேயும் எவ்வித ஆதரவும் இல்லாததை அடுத்தே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெயபாரதி கூறுகிறார்.












Click it and Unblock the Notifications