For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலையில் 4 ரூபாய் உயர்வா? விரைவில் வருகிறது அதிர்ச்சி அறிவிப்பு

பெட்ரோல், டீசல் விலை கடந்த 1 வாரத்திற்குப் பின்னர் மீண்டும் ஏற்றம் காண இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

    சென்னை: பெட்ரோல், டீசல் விலை கடந்த 1 வாரத்திற்குப் பின்னர் மீண்டும் ஏற்றம் காண இருக்கிறது. 4 ரூபாய் வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த வருட தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் ஒரு ரூபாய் என்று பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

    Another shocking, Petrol and Diesel prices will be hiked Rs. 4 for litre

    தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.61, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இடையில் கர்நாடக தேர்தலுக்காக சுமார் 10 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

    கடைசியாக ஏப்ரல் 24 உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மே 14ம் தேதி மீண்டும் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட உள்ளது. இன்று இரவு இல்லை நாளை பெட்ரோல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதுவரை பெட்ரோல், டீசல் விலை 10 பைசா முதல் 80 பைசா வரை மட்டுமே உயர்த்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மொத்தமாக 4 ரூபாய் உயர்த்தப்பட உள்ளது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    After 1 week petrol, diesel prices will be hiked by Rs 4 for litre as PSU oil firms began passing on a spike witnessed in international crude oil rates to consumers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X