சசிகலா மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வாய்ப்பு.. ஏன் தெரியுமா?
சொத்துக் குவிப்பு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட சசிகலா அதை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்று தீர்ப்பு நகல் தெரிவிக்கிறது.
சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலா நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்தவில்லை என்றால் அவர் கூடுதலாக சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்பது தீர்ப்பின் சாரமாகும்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பு வழங்கினார்.
குற்றத்திற்கு உடந்தையாக இருந்த, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

ஓராண்டு சிறை
அபாரதத்தை செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். மற்றொரு பிரிவின்கீழ், குற்றச்சதியில் ஈடுபட்டதற்காக, 3 பேருக்கும் தலா 6 மாதம் சாதாரண ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.

அபாரதம் செலுத்தவில்லை
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்துவிட்டது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால் அவரது சொத்துகளை விற்று அபராதத் தொகையை செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சசிகலா உள்பட மூவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை இதுவரை செலுத்தவில்லை என்று தெரிகிறது.

சிறை
இந்நிலையில், சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தை செலுத்தத் தவறினால் அவர் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

மற்றொரு பிரிவிலும் சிறை
குற்றச்சதி பிரிவுக்காக விதிக்கப்பட்ட ரூ.10,000 அபராதத்தை செலுத்தவில்லை மேலும் ஒரு மாதம் கூடுதலாக சிறையில் இருக்க வேண்டிவரும் என்பதே உச்சநீதிமன்ற தீர்ப்பு சாராம்சம். சசிகலா இன்னும் அபராதத்தை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications