Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் அருகே சிக்கிய ரூ.570 கோடி விவகாரத்தில் மர்மம் நீடிப்பு! இந்த கேள்விகளுக்கு விடை எங்கே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பூர் அருகே ரூ.570 கோடி பணத்தோடு 3 கன்டெய்னர் லாரிகள் பிடிபட்ட சம்பவத்தில் பெரும் மர்மம் நிலவிவருகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டம் அமலில் இருக்கும் இந்த நாட்டில், வங்கிப் பணம்தான் என்று அறிவிக்கப்பட்ட ஒரு பணப்போக்குவரத்து குறித்து பல நாட்கள் கடந்தும், மக்களுக்கு விடை தெரியாமல் இருப்பது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.

இப்போது, வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பணம் ஏன், கோவையில் இருந்து விசாகப்பட்டிணத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக எஸ்பிஐ வங்கி கூறுகிறது? இதில் விடை தெரியாத கேள்விகள் எவை என்பதை பார்க்கலாம்:

டீசல் இருந்துள்ளது

டீசல் இருந்துள்ளது

பணத்துடன் பிடிபட்ட லாரிகள், டீசல் போடுவதற்காக, சர்வீஸ் சாலையில் லாரிகள் சென்று கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று லாரிகளிலும் டேங்க் முழுவதும் டீசல் இருந்துள்ளது. பெருமாநல்லுார் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பப்பட்டது உறுதியாகியுள்ளது.

பிடிக்க ஏன் தாமதம்

பிடிக்க ஏன் தாமதம்

மூன்று லாரிகளும், தேர்தல் அதிகாரிகளால், 7 கிலோ மீட்டர் துாரம் துரத்தி செல்லப்பட்ட போது, மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில்தான் சென்றுள்ளதாக தெரிகிறது. அப்படியும், தேர்தல் அதிகாரிகளால் ஏன் உடனடியாக அவற்றை நிறுத்த முடியவில்லை?

மரப்பெட்டியில் பணம்

மரப்பெட்டியில் பணம்

மூன்று லாரிகளிலும் மொத்தம், 195 மரப்பெட்டிகளில் பணம் இருந்ததுள்ளது. தீ விபத்தில் இருந்து பணத்தை காக்கும் நோக்கத்திற்காக, விதிமுறைகளின்படி, இரும்பு பெட்டிகளில்தான் பணம் எடுத்துச்செல்லப்பட வேண்டும். தீயணைப்பு கருவியும் வாகனத்தில் இருக்க வேண்டும். ஆனால், மரப்பெட்டியும், தீயணைப்பு கருவிகள் இல்லாததும், சந்தேகத்தை அதிகரித்துள்ளன.

கார்கள் யாருடையது

கார்கள் யாருடையது

மொத்தம், மூன்று லாரிகள் மற்றும், மூன்று இன்னோவா கார்கள் பிடிப்பட்டன. மூன்று லாரிகள் பற்றிய தகவல்கள் தான் வெளி வருகின்றன. மூன்று இன்னோவா கார்களில், இரண்டு மட்டும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. மூன்றாவது எங்கே என தகவல் தெரிவிக்கப்படுவதில்லை.

அனுமதி பெறாதது ஏன்?

அனுமதி பெறாதது ஏன்?

பணம் எடுத்து செல்வது பற்றி கோவை போலீசாருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படாமல் இருந்தது ஏன்? தேர்தல் ஆணையத்திடம் முன்கூட்டியே அனுமதி பெறாதது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

எஸ்கேப் ஆவது ஏன்?

எஸ்கேப் ஆவது ஏன்?

பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் நேரிடையாக எந்த பதிலும் கூறாமல், வருமான வரி அதிகாரிகளை மட்டும் கை காட்டுவது ஏன்?

18 மணி நேர தாமதம் ஏன்?

18 மணி நேர தாமதம் ஏன்?

இந்த பணம், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு உரியது என்றாலும், அதற்கான உரிமையை கோர, 18 மணி நேரம் ஆனது ஏன்? இவ்வளவு பெரிய அளவுக்கு பணம் பிடிபட்டுள்ளபோதிலும், ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால், அரசு வங்கி அதிகாரிகளிடம் தாமதம் ஏற்பட்டது என்று காரணம் கூறுவதை ஏற்க முடியவில்லை.

கோவையில் இருந்து ஏன்?

கோவையிலிருந்து இவ்வளவு அதிகமான ரொக்கம், ஆந்திராவிற்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. விசாகப்பட்டினம் ஸ்டேட் வங்கி கிளைக்கு ரொக்கம் தேவைப்பட்டால், அந்த மாநிலத்தில் உள்ள, அந்த வங்கியின் பண காப்பத்தை தான் நாட வேண்டும். அப்படியே தேவை என்றாலும், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைப்படி, கோவையில் சேமிக்கப்பட்ட, 570 கோடி ரூபாய் ரொக்கத்தை, சென்னை ரிசர்வ் வங்கியின் பண பாதுகாப்பு மையத்துக்குத் தான் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏன் கோவையில் இருந்து பணம் கொண்டு செல்லப்பட்டது?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+