கூடங்குளம் அணு உலையில் மின்உற்பத்தியா? பொய் என்கிறார் உதயகுமார்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: கூடங்குளம் அணுஉலையில் இருந்து மின்உற்பத்தி செய்யப்படுவதாக கூறுவது பொய்யான தகவல் என அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
இடிந்தகரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கூடங்குளம் அணுஉலையில் இன்று அதிகாலை முதல் மின்உற்பத்தி செய்யப்படுவதாக பொய்யான தகவலை அணுஉலை நிர்வாகம் தருகிறது.

ரஷ்யா சென்றுள்ள பிரதமர், கூடங்குளத்தில் மின்உற்பத்தி தொடங்கியுள்ளதாக அந்நாட்டில் தெரிவிக்கவே இப்படி பொய் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக உதயகுமார் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து நாளை சார்பு கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட இருப்பதாக உதயகுமார் கூறினார்.












Click it and Unblock the Notifications