திருவண்ணாமலை கொடூரம்.. பிஞ்சு குழந்தையை மது குடிக்க வைத்த மிருகங்கள்... நெஞ்சை உலுக்கும் வீடியோ
திருவண்ணாமலை: திருவண்ணாமலை பகுதியில் பிஞ்சு குழந்தைக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து குடிகார மிருகங்கள் மகிழும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாக பரவி நெஞ்சை உலுக்கி வருகிறது.
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ காட்சி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒன்றரை வயது பிஞ்சு குழந்தை அமர்ந்திருக்க அதன் கையில் மது ஊற்றப்பட்ட கப் இருக்கிறது..
முன்னே சைடிஷ் போல ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.. சுற்றி நிற்கும் குடிகார மிருகங்கள் அந்த குழந்தையை குடி... குடி என கூக்குரலிடுவதும்.. சைடிஸ் எடுத்து சாப்பிடுமாறு சொல்லுவதும் அதை படம்பிடித்து மகிழ்வதுமாக கூத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள்..
இந்த வீடியோ காட்சியில் TN 25 என்ற பதிவெண் இருப்பதால் அனேகமாக இது திருவண்ணாமலை பகுதியில்தான் நடந்திருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த குடிகார மிருகங்களின் கொடுஞ்செயல் மனித நெஞ்சங்களை உலுக்குவதாக கூறி கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.