ஜெயலலிதா இல்லத்தை சுத்தப்படுத்தவே வருமான வரி சோதனை... அன்வர் ராஜா எம்.பி ஆதரவு!
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வருமான நடந்த வருமான வரி சோதனையால் களங்கம் இல்லை களங்கம் துடைக்கப்பட்டுள்ளதாக அதிமுக லோக்சபா எம்பி அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
மதுரை : ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதால் களங்கம் துடைக்கப்பட்டிருப்பதாக லோக்சபா எம்பி அன்வர்ராஜா கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது : போயஸ் கார்டனில் சசிகலா குடும்பத்தினர் பல்வேறு ஆவணங்களை பதுக்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையிலேயே வருமான வரி சோதனை நடந்துள்ளது. வருமான வரி சோதனைக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த சோதனையின் பின்னணியில் பாஜக இருக்கிறதா என்பது பின்னர் தான் தெரிய வரும்.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்திருப்பதால் களங்கம் ஏற்படவில்லை. அங்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைக்கவே வருமான வரி சோதனை நடந்துள்ளது. மொத்தத்தில் போயஸ் கார்டனில் இருந்த களங்கம் துடைக்கப்பட்டுள்ளது என்று அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications