கனமழை: சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு பூமியில் இறங்கியதால் பீதி- 80 பேர் வெளியேற்றம்
சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் லஸ் சர்ச் சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் தண்ணீர் சேமிப்பு தொட்டி பூமிக்குள் புதைந்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பீதியடைந்த குடியிருப்புவாசிகள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
கடந்த 9ம் தேதி முதல் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகளும், புறநகரும் நீரில் மூழ்கியுள்ளன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் உள்ளே புகுந்துள்ளன.

மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ள தால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் லஸ் சர்ச் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் சி பிளாக்கில் தரைத்தளத்தில் வீட்டின் முன்பு தண்ணீரை சேமித்து வைக்க கட்டப்பட்டிருந்த தொட்டி புதன்கிழமையன்று இரவு 8 மணி அளவில் திடீரென்று பூமிக்குள் புதைந்ததால் பள்ளம் ஏற்பட்டது. இதனை குடியிருப்பு வாசிகள் யாரும் பெரிதாக கருதவில்லை. அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர்.
வியாழக்கிழமையன்று அதிகாலை 3 மணி அளவில் தண்ணீர் சேமிப்பு தொட்டிக்கு மேலே கட்டிடத்தின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த மக்கள் அதிர்ச்சி அடைத்தனர். இதையடுத்து சி பிளாக்கில் வசித்து வரும் 16 குடும்பத்தினரும் குழந்தைகளுடன் அவசர அவசரமாக குடியிருப்பை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்து வந்த மயிலாப்பூர் போலீஸார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்களை சமாதானம் செய்தனர்.
பின்னர் சி பிளாக்கில் வசித்தவர்களை மட்டும் தங்களுடைய வீடுகளுக்கு செல்ல வேண்டாம். மற்ற 7 பிளாக்குகளில் வசிப்பவர்கள் அவரவர் வீடுகளுக்கு செல்லலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து சி பிளாக்கில் வசிப்பவர்கள் மற்ற பிளாக்குகளில் உள்ள நண்பர்கள் வீடுகளுக்கு சென்றனர். தொடர் மழையால் நகரின் பிரதான பகுதியான ஆழ்வார்ப்பேட்டையில் குடியிருப்பு புதைந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications