காவிரி மருத்துவமனைக்கே வந்து கருணாநிதி உடல் நலன் விசாரித்த அப்பல்லோ சேர்மன்
அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, அவரது மகள் பிரீதா ரெட்டி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு கருணாநிதியின் குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தா
சென்னை: காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து, அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் அவரது மகள் பிரீதா ரெட்டி கருணாநிதி குடும்பத்தாரிடம் விசாரித்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தொண்டை மற்றும் நுரையீரல் நோய் தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, அவரது மகள் பிரீதா ரெட்டி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு கருணாநிதியின் குடும்பத்தினரை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார். அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை முறை குறித்து கருணாநிதி முன்பு ஒருமுறை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.