ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை வரவேற்கும் தகுதி, இந்தத் தலைவர்களுக்கு உள்ளதா?
இன்று ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்த செய்தி வெளியானதும், சுறுசுறுப்பாக சில தலைவர்கள் அறிக்கை விட ஆரம்பித்தனர்.
வழக்கம் போல நீதி நிலைநாட்டப்பட்டது... சத்தியம் வெல்லும்.. முற்பகல் செய்யின்.. என்ற வார்த்தை ஜாலங்களோடு தீர்ப்பை வரவேற்று சில தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வேடிக்கை என்ன வென்றால் இவர்கள் அனைவருமே வழக்கு நடைபெற்ற காலத்தில் ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்து அவரை வாயாரப் புகழ்ந்தவர்கள், ஜெயலலிதாவை வானளாவ உயர்த்திப் பாராட்டி மேடைகளில் முழங்கியவர்கள்.

வைகோ
1998, 2006, 2009 தேர்தல்களில் ஜெயலலிதாவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தவர் வைகோ. அப்போது அவர் ஜெயலலிதாவைப் புகழ்ந்த விதம் பார்த்து அதிமுகவினரே வாயடைத்து நின்றனர். அந்த வைகோதான் இப்போது ஜெயிலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்று, தீர்ப்பளித்த நீதிபதியையும் பாராட்டியுள்ளார்.

ராமதாஸ்
அதிமுக, திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்த கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி. அவரும் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசியுள்ளார். இந்த வழக்குகள் அனைத்துமே அரசியல் உள்நோக்கம் கொண்டவை என கண்டித்துள்ளார். அவரோ இன்று நீதி நிலை நாட்டப்பட்டது என்று அறிக்கை விடுத்துள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன்
ஜெயலலிதாவுடனான கூட்டணிக்காக இன்று வரை ஏங்கிக் கிடக்கும் கட்சிதான் பாஜக. ஏற்கெனவே இரு முறை கூட்டணி வைத்தவர்கள். சொல்லப் போனால் தமிழகத்தில் கால் ஊன்றவே வலுவற்றுக் கிடந்த அக்கட்சிக்கு முதல் முதலில் 4 எம்பிக்களைப் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதாதான். இன்று அந்தக் கட்சியின் தலைவர்கள் தமிழிசையும், பொன் ராதாகிருஷ்ணனும் விடுத்துள்ள அறிக்கைகளைப் பார்த்தால், அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர்கள் கூடத் திட்டிவிடுவார்கள்!

விஜயகாந்த்
ஒற்றை உறுப்பினருடன் இருந்த விஜயகாந்தின் தேமுதிகவுக்கு இந்ததேர்தலில் 27 உறுப்பினர்களைப் பெற்றுத் தந்தது ஜெயலலிதாவுடனான கூட்டணிதான். ஆனால் அவரோ ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தீர்ப்பு தமிழகத்துக்கு தலை குனிவு என்கிறார்.

கம்யூனிஸ்டுகள்
எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக அல்லது அதிமுகவுடன் ஒட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தத் தீீர்ப்பை வரவேற்று, பொது வாழ்வில் நேர்மை பற்றி பாடம் எடுத்துள்ளன.
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications