நாளை அரியலூர் "டாக்டர்" அனிதாவின் பிறந்த நாள் #happybirthdayanitha
அரியலூர் அனிதாவின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.
அரியலூர்: மருத்துவ கனவு கண்டு அது ஈடேறாததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது.
அரியலூரை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா. இவர் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார்.
ஆனால் கடந்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வில் அனிதாவால் சோபிக்க முடியவில்லை. இதனால் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடினார்.
எனினும் அந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றமும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துமாறு உத்தரவிட்டது.
மண்ணுலகை விட்டு மறைந்த மருத்துவமே...
— Jagan Mohan (@Jagan_karur) March 4, 2018
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதாி...#happybirthdayanitha #anitha @__logu__ @jaganbhonsle @ShanmugamADMK @tamilatheist pic.twitter.com/apvESd0tr8
இதனால் அனிதாவின் மருத்துவர் கனவு கானல் நீராகி போனதை எண்ணி அந்த ஏழை மனம் விம்மியது. எனினும் துக்கம் தாளாமல் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. மருத்துவர் கனவோடு மறைந்த அனிதாவுக்கு சமூகவலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிரப்பட்டு வருகின்றன.