அரியலூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- பாதுகாப்பு அதிகரிப்பு
நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் அரியலூர் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று மர்ம நபர்கள் கடிதம் எழுதியுள்ளதால் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம கடிதம் கிடைத்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மிரட்டல் தொடரும் என கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவை நீட் தேர்வு காவு கொண்டது. மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்த அனிதாவிற்கு நீட் தேர்வு எமனாக அமைந்து விட்டது.

அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அரியலூர் ரயில் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டால் வெடிகுண்டு வெடிக்கும் என்றும், ரத்து செய்யும் வரை மிரட்டல் தொடரும் என்றும் மர்மநபர்கள் அந்த கடிதத்தில் மிரட்டல் விடுத்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூர் ரயில் நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அரியலூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாகி வருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications