For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்காக வேண்டுதல்.. ஆஞ்சநேயர் கோவிலில் பூஜை செய்து பிரசாதத்துடன் வந்த அர்ஜுன் சம்பத்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சரியாக வேண்டும் என்று ஆஞ்சிநேயர் கோவிலில் பூஜை செய்து காவேரி மருத்துவமனைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிரசாதம் எடுத்து வந்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சரியாக வேண்டும் என்று ஆஞ்சிநேயர் கோவிலில் பூஜை செய்து காவேரி மருத்துவமனைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிரசாதம் எடுத்து வந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதோடு நேற்று இரவு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Arjun Sambath prays for Karunanidhi and brought prasadam to hospital

அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எட்டுக்கும் அதிகமான மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் விசாரித்தார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். காவேரி மருத்துவமனை வந்த அர்ஜுன் சம்பத் ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்த விசாரித்தார்.

கையில் அவர் சாமி படத்துடன் வந்தார். அதோடு மருத்துவமனைக்கு ஆஞ்சிநேயர் கோவிலில் பூஜை செய்து பிரசாதம் எடுத்து வந்தார். கருணாநிதியின் உடல்நிலை சரியாக வேண்டும் என்று பூஜை செய்துள்ளேன், அவர் விரைவில் குணமடைவார் என்று பேட்டியளித்தார்.

English summary
Hindu Makkal Katchi Leader Arjun Sambath prays for Karunanidhi and brought prasadam to hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X