மக்கள் நல கூட்டணி பாண்டவர்களின் பாஞ்சாலி யார் தெரியுமா? நாஞ்சில் நாறாச கமெண்ட்
சென்னை: குறியே பார்க்க தெரியாத வைகோ அர்ஜுனனாம் என்று கூறி பிரசாரத்தின் நடுவே கேலி செய்தார் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.
சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த நாஞ்சில் சம்பத் மக்கள் நல கூட்டணி குறித்து விமர்சனம் செய்தார்.
அவர் கூறுகையில், மக்கள் நல கூட்டணி தலைவர்கள் பஞ்ச பாண்டவர்கள் என்று கூறிக்கொண்டுள்ளனர். இவர்கள் மகாபாரதத்தை படித்திருக்க மாட்டார்கள்.

குறி பார்க்க தெரியாது
விஜயகாந்த் தருமராம். தருமர் என்றுமே மது குடித்தது கிடையாது. குறியே பார்க்க தெரியாத வைகோ அர்ஜுனராம். கோவில்பட்டியிலேயே அவரால் தேர்தலில் நிற்க முடியவில்லை.

வாசன் கர்ணனா
திருமாவளவன் பீமராம், முத்தரசனும், ராமகிருஷ்ணனும், நகுலன், சகாதேவர்களாம். இதில் இப்போது கர்ணன் பாத்திரம் குறைகிறது என்று வாசன் வேறு வந்து சேர்ந்துள்ளார். இதெல்லாம் உருப்படுமா.

பாஞ்சாலி
இவ்வாறு பேசிய நாஞ்சில் சம்பத், மக்கள் நல கூட்டணியிலுள்ள 5 தலைவர்களுக்குமான, பாஞ்சாலி யார் தெரியுமா..? என்று ஒரு பெண் தலைவர் பெயரை குறிப்பிட்டு பேசினார்.

ஒருமையில் பேசிய நாஞ்சில்
மேலும், விஜயகாந்த், வைகோ, திருமா என அனைத்து தலைவர்களையுமே, நாஞ்சில் ஒருமையில் பேசி பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications