மாநகர ஊழியர்களை மட்டும் நம்பி பலனில்லை.. எழும்பூரில் மழை நீரை அகற்றி சுத்தம் செய்த போலீசார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: எழும்பூர் பகுதியில் சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தை ஆயுதப்படை போலீசார் அகற்றியுள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் 100 ஆயுதப்படை போலீசார், மழை நீர் அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசு கண் மருத்துவமனை, ராணி மெய்யம்மை மஹால் பகுதிகளிலும் போலீசார் நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
Recommended Video

வடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ

மாநகராட்சி அதிகாரிகளால் மட்டுமே வெள்ள நீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளதால், போலீசாரையும் களமிறக்க வேண்டிய நிலை காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
வருங்காலங்களில் மழை தொடர்ந்தால், காவல்துறையும் மீட்பு பணிகள், துப்புரவு பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications