ஆவடி ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையை மூட மத்திய அரசு முடிவு... 2200 பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம்
சென்னை ஆவடியில் இயங்கி வரும் ராணுவ சீருடை தயாரிப்பு தொழிற்சாலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை ஆவடியில் இயங்கி வரும் ராணுவ சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னையில் ஆவடி உள்ளது ராணுவ வீரர்களுக்கான சீருடை தயாரிக்கும் தொழிற்சாலை. இது கடந்த 1961-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 2200 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் சீருடைகள், சுவட்டர், போன்ற ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஆலையை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 2200 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்படுவதற்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்கள், கோவையில் உள்ள கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், திருச்சியில் உள்ள வாழை ஆராய்ச்சி நிறுவனம், அச்சகங்கள், மீன் ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றை மூடவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications