For Daily Alerts
Just In
அண்ணா அறிவாலயத்தில் அற்புதம்மாள்... ஸ்டாலினுக்கு நன்றி கூறினார்
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டசபையில் குரல் கொடுத்த மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து அற்புதம்மாள் நன்றி கூறினார்.
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி கூறினார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்க துணை நின்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்.
பேரறிவாளனை பரோலில் விடுவிக்க சட்டப்பேரவையில் குரல் கொடுத்தற்காக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாக கூறினார்.
ராஜீவ் கொலையில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது பரோலில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். பேரறிவாளன் உடல்நிலையை கருத்தில் கொண்டு பரோல் அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் அனைத்து அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
For Arputhammal, one of the convicts in the Rajiv Gandhi assassination case A.G. Perarivalan, today meet and Thanks to Stalin
Story first published: Wednesday, September 27, 2017, 21:04 [IST]