ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று கைது செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ சார்பில் நிலுவையில் உள்ள அவர்களது சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உடனேயே அவர்களை அழைத்து அரசின் சார்பில் பேசி தீர்வு காண முயன்றிருக்க வேண்டும்.
அதற்கு மாறாக முன்கூட்டியே பல மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்து போராட்டத்தை நசுக்க அரசு எடுத்த முயற்சி கண்டனத்திற்குரியது. அதையும் தாண்டி, இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளுக்கு காவல் துறையை பயன்படுத்தி கைது, வழக்கு என்று தமிழக அரசு பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்துவது கண்டனத்திற்குரியது. நேற்றும், இன்றும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
அதேபோல, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்விற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications