AI-ஐ ஒரு கருவியாக பயன்படுத்துங்கள்.. சுயசிந்தனை மட்டுமே உங்களை முன்னேற்றும்.. முகேஷ் அம்பானி அட்வைஸ்
சாட் ஜிபிடி, டீப்சீக் போன்ற ஏஐ தொழில்நுட்பத்தை இளைஞர்கள் ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். உங்களின் முன்னேற்றத்திற்கு உங்கள் சிந்தனை மிகவும் அவசியம் என்று கூறிய அவர், தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றிபெற முடியும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் ஏஐ தொழிற்நுட்பம் மிரட்டி வருகிறது. ஏற்கனவே வந்த சாட் ஜிபிடி போன்ற ஏஐ தொழிற்நுட்பங்களை கட்டிலும் தற்போது சீனா தரப்பில் உருவாக்கப்பட்டுள்ள டீப்சீக் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் பலரும் ஏஐ தொழிற்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கா, சீனா தொழிற்நுட்பங்களிலும் கடுமையான போட்டி போட்டு கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவிலும் அடுத்ததாக ஏஐ தொழிற்நுட்பத்தை உருவாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சேர்மேன் முகேஷ் அம்பானி, ஏஐ தொழிற்நுட்பம் ஒரு கருவி தான். உங்களின் முன்னேற்றத்தில் சுயசிந்தனை அவசியம் என்று தெரிவித்திருக்கிறார்.
குஜராத்தில் உள்ள பண்டித தீனதயாள் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார். அப்போது முகேஷ் அம்பானி பேசுகையில், 21ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் உலகிலேயே இந்தியா அதிக வளம்மிக்க நாடாக மாறும். அதற்காக இயற்கைக்கு தீங்கு விளைவிக்க கூடாது. விரைவில் நாம் எரிபொருள்களை விடுத்து எனர்ஜியை பயன்படுத்த தொடங்க வேண்டும்.
அதேபோல் இளைஞர்கள் அனைவரும் நிச்சயம் சாட் ஜிபிடியை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஏஐ தொழிற்நுட்பம் உதவியாக இருக்கும். ஆனால் நாம் முன்னேற வேண்டும் என்றால், நம் சிந்தனையால் மட்டுமே முடியும். ஆர்டிஃபிஷியல் இண்டலிஜன்ஸ் மூலமாக நாம் முன்னேற்றம் அடைய முடியாது. அதனை யாரும் மறக்காமல் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
தற்போது வேகமாக மாறி வரும் உலகில், நாம் தொடர்ந்து கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் வெற்றியை தொடர வேண்டுமென்றால் கற்றுக் கொள்வதை நிறுத்த கூடாது. இளைஞர்கள் பலரும் விவசாயிகளுக்கும் பயனளிக்கக் கூடிய வகையில் பயோ-எனர்ஜி போன்ற புதிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டும். அது அதிகளவில் புதிய வேலைவாய்ப்புகளை கொடுக்கும்.
அதேபோல் ஏஐ, க்ரீன் எனர்ஜி மற்றும் சந்தைப் பொருட்கள் ஆகிய மூன்றும் தான் மனிதகுலத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எதிர்கால தலைமுறையினருக்கு இந்த இடத்தில் வாழ்வதற்கு மேம்படுத்தவும் நாம் பசுமை தொழிற்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications