சசிகலா சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
சசிகலா சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை: சசிகலா சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் வரும் மே 3-ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது 75 நாட்கள் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.

இதுதொடர்பாக சந்தேகம் உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதாவின் உறவினர்கள், நெருக்கமானவர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் சசிகலாவின் உறவினர்கள் விவேக், கிருஷ்ணப்பிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி அவர் மே 3-ஆம் தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications