புரோக்கர்களை வைத்து ஆசை காட்டி எம்எல்ஏக்களை வளைக்கப் பார்க்கிறார்கள்...அருண்மொழித்தேவன் ஆதங்கம்!

தினகரன் தரப்பினர் அரசியல் புரோக்கர்களை வைத்து எம்எல்ஏக்களுக்கு ஆசை வார்த்தை கூறி வளைக்கப் பார்ப்பதாக அருண்மொழித்தேவன் எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கடலூர் : டிடிவி. தினகரன் தரப்பினர் அரசியல் புரோக்கர்களை வைத்து எம்எல்ஏக்களை வளைக்க ஆசை வார்த்தைகளை கூறி வருவதாக அருண்மொழித்தேவன் எம்பி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் நிர்வாகிகளை மாற்றி அதிரடி அறிவிப்புகளை டிடிவி. தினகரன் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அருண்மொழித்தேவன் எம்பி, கட்சியில் உறுப்பினராக இருக்கிறாரா என்று கூட தெரியாத நிலையில் இருக்கும் தினகரன் நிர்வாகிகளை எப்படி மாற்றுகிறார் என்று கேள்வி எழுப்பினார்.

Arunmozhidevan MP says Dinakaran faction is brokering MLAs

தொடர்ந்து அருண்மொழித்தேவன் பேசியதாவது: தேர்தல் ஆணையத்தால் அதிமுக இரண்டு அணிகள் அறிவிக்கப்பட்டது. அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி என்ற இரண்டு அணிகளும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இணைந்துள்ளன. கட்சிக்கே தொடர்பு இல்லாத தினகரன் நிர்வாகிகளை எப்படி மாற்ற முடியும்.

எம்எல்ஏக்களை வளைப்பதற்காக அரசியல் புரோக்கர்களை வைத்து தினகரன் தரப்பு ஆசை காட்டி வருகிறது. அமைச்சர் பதவி கொடுப்பதாகக் கூறி எம்எல்ஏக்களை இழுத்து வருகின்றனர். இதன் விளைவாக 19 எம்எல்ஏக்கள் ஆதரவு என்பது தற்பாது 21ல் வந்த நிற்கிறது. ஆனால் இனி என்ன ஆசை வார்த்தை சொன்னாலும் நடக்காது. நிச்சயம் 21 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பில்லை, என்று அருண்மொழித்தேவன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+