முறைகேடாக குவிந்த பணம்.. ஒப்பந்ததாரர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை!
சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்: சாலை பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 7 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.
அருப்புக்கோட்டை எஸ்பிகே நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. ஆபரேஷன் பார்க்கிங் மனி என்ற பெயரில் அருப்புக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது.

அருக்கோட்டை செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதுவரை 110 தங்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. மொத்தமாக இதுவரை 190 கோடி ரூபாய் வரை பணம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது செய்யாதுரையிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை செய்து இருக்கிறார்கள். அருப்புக்கோட்டையில் நடக்கும் வருமான வரி சோதனையை அடுத்து அவரது வீட்டிலேயே வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதேபோல் செய்யாதுரையின் மகன்கள் உறவினர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடக்கிறது. இரண்டு மகன்களையும் தனியாக வைத்து விசாரித்து வருகிறார்கள். வீட்டில் உள்ள பணியாளர்களையும் விசாரித்து வருகிறார்கள்.
வருமான வரித்துறை ஆணையர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு விசாரணை நடத்துகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், பென் டிரைவுகள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இவரின் குடும்ப நிறுவனமான எஸ்பிகே என்று கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகிறார்கள். அங்கு பணியாற்று நபர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications